Pages

Sunday, April 3, 2016

சண்முகம் ஜெயக்குமார்


பேராசிரியர் சண்முகம் ஜெயக்குமார் (Shunmugam Jayakumar, பிறப்பு: 12 ஆகத்து 1939), முன்னாள் சிங்கப்பூர் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தூதுவரும் ஆவார். இவர் இந்திய மரபுவழித் தமிழர் ஆவார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், துணைப் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், உட்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் தொழிலமைச்சர் ஆகிய அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர். பெடோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2011 மே மாதத்தில் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது இவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் ஆலோசனை சபைத் தலைவராகவும், அப்பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுச் சட்டப் பேரவையின் காப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

No comments:

Post a Comment